Monday 15 March 2010

ஏப்ரல் 2 இல் 'பையா' திரைக்கு வருகிறது.

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி ஹீரோ கார்த்தி மற்றும் முன்னணி ஹீரோயின் தமன்னாவின் நடிப்பில் 'பையா' திரைப்படம் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 2 ம் திகதி திரைக்கு வருகிறது. லிங்குசாமி இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தயாரித்து இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியிருக்கும் பையா படத்தின் விநியோகஸ்தர் உரிமையை, தயாநிதி அழகிரி வாங்கியிருக்கிறார்.

Saturday 13 March 2010

நமீதாவின் இழப்பிற்கு அனுதாபம் தெரிவிக்கிறோம்..!

தனது செல்ல நாய் கூஃபி இறந்த சோகம் தாளாமல் ஒரு நாள் முழுக்க அழுது புலம்பிய நமீதா, அதற்கு மேல் சென்னையில் இருக்கப் பிடிக்காததால் நேற்று மாலை மும்பையிலுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றார். நமீதா சூரத்திலிருந்த போது வளர்த்த நாய் இந்த நாயின் பெயர் கூஃபி. சென்னையில் அவர் குடியேறியதும் தன் செல்ல நாயையும் கூடவே அழைத்து வந்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன் இந்த நாய்க்கு வாத நோய் தாக்கியது. அந்த நாய்க்கு உயர்தர சிகிச்சை அளித்து வந்தார் நமீதா. ஆனாலும் நேற்று கூஃபி இறந்துவிட்டது. இதனால் பெரும் சோகத்துக்கு ஆளான நமீதா, நேற்று முழுவதும் யாருடனும் பேசாமல் அழுது கொண்டே இருந்தாராம். பின்னர் படப்பிடிப்பையல்லாம் கேன்சல் செய்துவிட்டு, மும்பையிலுள்ள தனது பெற்றோரைப் பார்க்க கிளம்பிச் சென்றார். “கூஃபி இறந்ததை என்னால் தாங்க முடியவில்லை. எனவே கொஞ்ச நாளைக்கு மன ஆறுதலுக்காக அம்மா அப்பாவிடம் இருக்கப் போகிறேன்” என்றார் நமீதா!

சிம்புவால் மனம் மாறிய சிங்கப்பூர் பெண்....!!!

அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் நாயகன் சிம்பு, ஒரு சிங்கப்பூர் பெண்ணின் மனதை மாற்றிய சந்தோசத்திலிருக்கிறார். மனம் மாறிய பெண், பிரபலமான ஒரு சமூக இணையத்தளத்தில் வெளியிட்ட படைப்பாலேயே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

சிங்கப்பூர் இல் வசிக்கும் ஒரு பெண் சில காரணங்களுக்காக தனது காதலனை பிரிந்திருந்தார். சிம்பு நடித்த விண்ணைதாண்டி வருவாயா படத்தை பார்த்து தான் தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும், தனது காதலனுடன் மீண்டும் இணையப்போவதாகவும் அந்த சமூக இணையத்தில் தெரிவித்திருக்கிறார். அத்துடன் சிம்புவிற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி நடிகர் சிம்புவிடம் கேட்டபோது, பெரிய புன்னகையுடன் அவர் சொன்ன பதில் : "என் நடிப்பால் ஒரு பெண்ணின் மனதை மாற்ற முடியுமென்பது ஆச்சரியமளிக்கிறது. சந்தோசப்படும் அதேவேளை கௌரவிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன்". இது தொடர்பாக படத்தின் இயக்குனர் கெளதம் மேனன் கூறியதாவது : "கிடைக்கும் பெருமையெல்லாம் சிம்புவையே சாரும்".

ரஞ்சிதாவின் ஆயில் மசாஜ் சேவை.....!!!

சுவாமி நித்தியானந்தா - நடிகை ரஞ்சிதாவின் காம லீலை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நித்தியானந்தாவோ தான் சட்டப்படி எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என தெரிவித்திருந்தார். மேலும், அவர் பிரத்தியேகமாக வழங்கிய பேட்டியில் இந்த விடயத்தை தவிர்த்து ஏனையவற்றை மட்டும் பேசியிருந்தார். இதேவேளை நடிகை ரஞ்சிதாவோ தான் சுவாமிக்கு சேவைதான் செய்ததாக கூறியிருந்தார்.

இரண்டரை மணித்தியாலங்களுக்கு ஓடக்கூடிய வீடியோவை லெனின் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்ட போதும், கிட்டத்தட்ட இருபது நிமிட காட்சிகளே வெளிவந்திருந்தன. இப்போது புதிதாக நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவிற்கு ஆயில் மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளிவந்திருக்கிறது. You Tube இலிருந்து அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


Friday 12 March 2010

சூர்யாவின் 'சிங்கம்' படப்பிடிப்பு தளத்தில்...

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜாவினால் தயாரிக்கப்படும் சிங்கம் படத்தில் நடிகர் சூர்யா போலீஸ் வேடத்தில் நடிப்பது முன்னரே தெரிந்த பழைய செய்தி. ஹரியின் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவாகிவரும் சிங்கம் படத்தில் சூர்யாவுடன், அனுஷ்கா செட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் நடிக்கின்றனர். சிங்கம் படத்தின் படப்பிடிப்பில் எடுத்த சில காட்சிகள் இங்கே :






















சுல்தான் தி வாரியார் மீண்டும் சிக்கலில்...

தங்களுக்கு தர வேண்டிய 11.59 கோடி ரூபாயை 12 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தாத வரை ர‌ஜினியின் சுல்தான் தி வா‌ரியர் படத்தை வெளியிட ஆஸ்கார் ஸ்டுடியோவை அனுமதிக்கக் கூடாது என அனில் அம்பானியின் ‌ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சௌந்தர்யாவின் ஆஸ்கர் ஸ்டுடியோ சுல்தான் தி வா‌ரியரை அனில் அம்பானியின் ‌ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸுடன் இணைந்து தயா‌ரிக்க 2008ல் ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்த காலகட்டம் முடிந்த பிறகும் பட வேலைகள் முடியாததால் ‌ரிலையன்ஸ் தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. அதன் பிறகு சௌந்தர்யாவின் ஆஸ்கர் ஸ்டுடியோ படத்தின் ஒட்டு மொத்த தயா‌ரிப்பு பணியையும் ஏற்றுக் கொண்டது.

சுல்தான் தி வா‌ரியர் பட வேலைகள் முடிந்து இன்னும் ஓ‌ரிரு மாதங்களில் படம் திரைக்கு வரவுள்ளது. இதனை அறிந்த ‌ரிலையன்ஸ், ஆஸ்கர் ஸ்டுடியோ மீது தனது 11.59 கோடியை வட்டியுடன் செலுத்தும்படி வழக்கு தொடர்ந்துள்ளது.

செல்வா - சோனியா : சட்டபூர்வமாக பிரிந்தனர்


சென்னையிலுள்ள குடும்ப நல நீதிமன்றம் ஒன்று செல்வராகவன் - சோனியா அகர்வால் பிரிவிற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. சுயவிருப்பின் பேரில் விவாகரத்து பெறும் வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ராமலிங்கம், அவர்கள் இருவரையும் சட்டபூர்வமாக பிரித்துவைத்தார். முன்னதாக மார்ச் 9 ம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த இருவரும் தமது முடிவில் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பதாகவும், விவாகரத்தை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தனர். இந்த வழக்கை நீதிபதி, 12 ம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
காதல் கொண்டேன் படப்பிடிப்பில் காதல் கொண்ட சோனியா - செல்வா 2006 ம் ஆண்டு திருமணம் செய்தனர். எனினும், இரண்டு வருடங்களே நீடித்த அவர்களின் தாம்பத்யம், 2009 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடுக்கப்பட்ட விவாகரத்து வழக்கின் மூலம் கேள்விக்குறியானது. அன்றிலிருந்து பிரிந்து வாழ்ந்த இருவரும், நேற்றிலிருந்து நிரந்தரமாக பிரிந்து சென்றனர்.

ஐஸ்வர்யா வெளியிடவிருக்கும் 'இரட்டைசுழி' பாடல்கள்


இமயமும் சிகரமும் இரட்டைசுழி படத்தின் பாடல் வெளியீட்டு விழா மார்ச் மாதம் 15 ம் திகதி சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது. இப்படத்தின் பாடலை வெளியிட்டுவைக்கிறார் ஐஸ்வர்யா ராய். இதற்காக அவர் சென்னை வரவிருக்கிறார். உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ் உட்பட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யாவை விழாக்களுக்கு அழைப்பது கடினமான விடயமெனினும், படத்தின் இயக்குனர் தாமிர ஒருவாறு ஐஸ்வர்யா ராயை தனது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வைத்திருக்கிறார்.

இந்தப்படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாலசந்தர் ஆகியோரும் சில காட்சிகளில் தோன்றுகின்றனர். சங்கரின் S Pictures நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இமயமும் சிகரமும் இரட்டைசுழி படம் திரைக்கு வருகிறது.

Thursday 11 March 2010

புதிய ஒளிப்பதிவாளரை அறிமுகப்படுத்துகிறார் கமல் ஹாசன்.

திறமையான புதிய பல கலைஞர்கள் கமல் ஹாசனால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். அண்மைய காலங்களில் கமலினால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் : இயக்குனர் சக்ரி, இசையமைப்பாளர் ஸ்ருதி மற்றும் நவீன திரைக்கதை எழுத்தாளர் இரா.முருகன். இரா.முருகன், கமலின் கடைசியாக வெளிவந்த 'உன்னை போல் ஒருவன்' படத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தார்.


கமலின் அடுத்த படத்தில் அறிமுகப்படுத்தப்பட இருப்பவர் ஒரு கேமராமன். உதயாநிதி ஸ்டாலின் தயாரிப்பில் K.S.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் கமலின் அடுத்த படத்திலேயே, எழுத்தாளர் ஞானியின் மகன் மனுஷ் நந்தன் ஒரு ஒளிப்பதிவாளராக அறிமுகம் செய்யப்படுகிறார். இவர் பல ஒளிப்பதிவாளர்களிடம் துணை ஒளிப்பதிவாளராக கடமையாற்றியிருக்கிறார். அண்மையில் ஹிந்தி திரையுலகில் வெளியான 'My name is Kaan' எனும் படத்தின் படப்பிடிப்பாளருக்கு துணையாக கடமையாற்றிய மனுஷ், ஒளிப்பதிவாளராக சிறந்த அனுபவங்களைப் பெற்றுள்ளார்.


கமலின் அடுத்த படத்தின் புகைப்படப் பிடிப்பு, மார்ச் மாதம் 20 ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த நிகழ்வில், கமல் ஹாசன், மாதவன் மற்றும் த்ரிஷா ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

Wednesday 10 March 2010

"சிறுத்தை"யில் கார்த்தியுடன் தமன்னா....


கார்த்தி - தமன்னாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் "பையா"வில் இருவரும் நன்றாக நடித்துள்ளனர். அண்மையில் பையா திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதில் பையா நாயகன் கார்த்தி கூறியதாவது : இந்தப் படத்தில் மக்கள் எனது புதிய தோற்றத்தைக் காண்பார்கள். தமன்னா கூறியதாவது : ஒரு நடிகைக்கு கிடைக்க வேண்டிய இலட்சியமான பாத்திரம் இந்தப் படத்தில்தான் எனக்கு கிடைத்தது.

தமிழ் திரையுலகின் தற்போதைய முதல்தர ஜோடி கார்த்தி - தமன்னா தான் சிறுத்தை படத்திலும் நடிப்பார்கள். சிறுத்தை படத்தை கதிர் இயக்குகிறார். இவர் தெனாவெட்டு எனும் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை படம் ஒரு வருடத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. எனினும் கார்த்தி 'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் பையாவில் நடித்துக்கொண்டிருந்ததால் சிறுத்தை படம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது கார்த்திக்கு நேரம் கிடைத்துள்ளதால் சிறுத்தை பற்றிய இன்னுமொரு அறிவிப்பு வெளிவரும்.

படங்களுக்கு நடிகையை தெரிவு செய்யும் போது பெரும்பாலும் தமன்னாவின் பெயரைத்தான் பலரும் பரிந்துரைகின்றனர்.

பகிரங்க கடிதம் : "நான் ரஞ்சிதா பேசுறேன்"

நடிகை ரஞ்சிதா - சுவாமி நித்தியானந்தா சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சட்டப்படி தானோ அல்லது தனது அமைப்போ எந்த தவறும் செய்யவில்லை என்று நித்தியானந்தா கூறியிருந்தார். இப்போது, நடிகை ரஞ்சிதா பகிரங்கமாக எழுதிய கடிதம் எனும் தலைப்பில் சில மின் ஊடகங்களில் ஒரு உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்தை, சிலர் மின் அஞ்சல் மூலமாகவும் பரப்பிவருகின்றனர். எமது வாசகர்கழுக்காக அந்தக் கடிதம் இங்கே தரப்படுகிறது. எனினும், இந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. அதாவது யாரால் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை.


ரஞ்சிதாவின் கடிதம்
------------------------------

நான் இனி அழப்போவதில்லை. ஆண்களே, நான் அழும் கண்ணீரில் கூட சாராய போதை கிடைக்கிறது உங்களுக்கு..

காரணம் நான் ஒரு நடிகை. உடலை காட்டி பிழைப்பவள். அப்படித்தான் பிழைத்தேன்.

வரிசையாக கப்பம் கட்டிவிட்டு என் உடலை பார்க்க வந்த நீங்கள் எல்லாம் பரிசுத்தமாகிவிட்டீர்கள்.

உன் தங்கையின் ஜாக்கெட்டில் இரண்டு பட்டன்களை தளர்த்தி அவளை அறுபது டிகிரிக்கு குனிய வைத்து போட்டோகிராபருக்கு போஸ் கொடுக்க சொல்வாயா? சொல்ல மாட்டாய். காரணம் உனக்கு அந்த பிழைப்பு விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம் அல்லது உன் தங்கைக்கு அது அறுவறுப்பானதாய் தெரிந்திருக்கலாம் அல்லது உன் தங்கையை அந்த கோலத்தில் யாரும் பார்க்க பிரியப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது நீ உயர் குடியில் பிறந்தவனாக இருக்கலாம்.

நண்பா ஒன்றை நினைவில் கொள்…உன் போல் உயர் குடியில் பிறந்த பலருக்காக கீழ் குடியில் பிறந்த என் தனங்கள் தாழ்ந்தன. உன் போல் மேல் குடியில் பிறந்த எத்தனையோ பேருக்காக என் கீழ் குடி கதவுகள் திறந்தே இருந்தன.

நான் என் சதையை காட்டி சினிமாவில் பணம் சம்பாதித்தேன் என்பது உன் மேலோட்டமான குற்றச்சாட்டாக இருக்கலாம். யார் யாரோ பார்ப்பதற்காக என் மார்பையும் மச்சத்தையும் சில சமயம் ஒட்டு மச்சங்களையும் மாராப்பையும் விலக்கி காட்டினேன். அதை உன் பாஷையில் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் “அப்படி காட்டியவள் தானே இவள்” என்ற அலட்சியத்தில் தானே என் யோனியை கிளோஸ் அப்பில் படம் பிடித்து திரையில் காட்டி இந்த யோனிக்கு சொந்தக்காரி யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று பொதுமக்களுக்கு புதிர் போட்டி அறிவித்தாய். ஒரு நாள் கெடுவும் கொடுத்தாய். இதை விட ஒரு வக்கிரத்தை என் மேல் யார் அரங்கேற்ற முடியும்.

ஒரு வேளை நீ என்னிடம் அன்று பேரம் பேசியிருந்தால் என் மானத்தை காப்பாற்ற உன் காலில் விழுந்து கதறியிருப்பேன், என் கடைசி ஆடை வரை உனக்கு விற்றிருப்பேன். அல்லது நீ வரிசையாக ஆண்களை அனுப்பு நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று ஒரு நாள் முழுக்க படுத்தே கிடந்திருப்பேன். அய்யோ...என்னை கிழித்து எறிந்துவிட்டாயே?

என்னை முழுவதும் நிர்வாணமாக்கி என் முகத்தை மட்டும் கருப்பு துணியால் மூடி தெருத்தெருவாக இழுத்துக்கொண்டு போனாய். குழந்தைகளும் பெரியவர்களும் குடும்பஸ்தர்களும் என் திருக்கோலம் காண அம்மணமாய் அழைத்துக்கொண்டு போனாய். அந்த ஊர்வலத்தில் என் தாயும் நின்றிருந்தாள் என்று உனக்கு தெரியுமா? பிறகு ஒரு குன்றின் மேல் என்னை நிறுத்தி இந்த பரிதாபத்துக்குரிய நடிகை யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று புதிர் போட்டாய்.
என்ன அழகாக புதிர் போட்டாய். R என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட நடிகை.

பெரும் மதிப்புக்குரிய பத்திரிகையாளனே....சாமியாரின் சல்லாப வீடியோ ஒன்று உன் அலுவலகத்திற்கு வருகிறது. அதை நீ ஓடவிடுகிறாய். சுற்றி ஐம்பது பேர் அமர்ந்து அதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது உன் வீட்டில் உள்ள ஒரு பெண்ணோடு சாமியார் படுத்திருப்பதாக காட்சி வருகிறதென்று வைத்துக்கொள்வோம் உடனே எழுந்து “அய்யா அந்த பெண் எங்கள் வீட்டு மங்கை , வசமாக மாட்டிக்கொண்டாள், அவள் பெயர் dash என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும்” என்று எல்லோருக்கும் அறிவிப்பாயா?. அந்த வீடியோவுக்கு பின்னணி இசை சேர்த்து நேர்த்தியாக ஒளிபரப்பி உன் வீட்டாரோடு அமர்ந்து “அம்மா இந்த எப்பிசோடுக்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுதினேன்” என்று பெருமை பொங்க பீற்றிக்கொள்வாயா? நான் கண்ணீரோடு கேட்கிறேன்

ஒரு வேளை உன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடரில் நடிக்கும் பிரதான நடிகையின் ஆபாச வீடியோ உனக்கு கிடைத்திருந்தால் அந்த தொடர் முடிவதற்கு முன் அந்த நடிகையின் ஆபாசத்தை நீ பகிரங்கமாக பின்னணி இசையோடு வெளியிடுவாயா? உன் தொடரில் அவள் ஒரு சீதையாக சித்தரிக்கப்பட்டிருப்பாள். என் துர்ரதிர்ஷ்டம் உன் தொலைக்காட்சியில் வரும் ஏதேனும் ஒரு தொடரில் எனக்கு சீதை வேடம் கிடைக்காமல் போய்விட்டது.
அப்படியிருக்குமானால் என் மானம் தொடர் முடியும் வரையாவது காப்பாற்றப்பட்டிருக்கும்.

“எவளோ ஒருத்தியின் உடல் தானே...எவளோ ஒருத்தியின் மானம்...கப்பல் ஏறினால் என்ன? அவள் மட்டும் என்ன யோக்கியமா? நடிகை தானே...பலர் பார்க்க தன்னை பலகாரம் ஆக்கியவள் தானே என்று எளிதாய உன் செயலை ஞாயப்படுத்தி விட்டாய். போகட்டும்....” என் கண்ணீர் உன்னை தொடரும்.
அது நிச்சயம் உன்னை பழி வாங்கும்.

நீ என்றாவது நினைத்து பார்த்ததுண்டா? உன் வாலிபம் என் போன்ற நடிகைகளின் சதையால் ஆன சவக்குழி என்பதை . முகப்பரு முளைத்த வயதுகளில் பத்திரிகைகளின் நடு பக்கத்தில் நடு மார்பு தெரிய நான் நின்றிருந்தேனே அதை நடு இராத்திரியில் குளியலறையில் பார்த்து குதூகலமடைந்தாயே….. துரோகி என் உடல் அச்சிடப்பட்ட காகிதத்தை தின்ற கழுதை நீ. உனக்கு பொதி சுமப்பவளின் வலி எங்கு தெரியப்போகிறது.
வேண்டாம் இனி நான் அழ ஒன்றுமில்லை.

என் கண்களுக்கு பழி தீர்க்கும் பசி வந்துவிட்டது. என் உடல் நடுங்குகிறது. எப்போதுமில்லாமல் இப்போது என் நிர்வாணம் என்னை பயமுறுத்துகிறது. எப்போதும் என்னை கேமரா கண்கள் துரத்துகிறது. உறக்கத்தின் நடுவே படபடப்போடு விழித்து என் உள்ளாடைகளை உதறுகிறேன். கேமராக்களை என் யோனியில் கூட பொருத்தியிருக்கலாம்.

இப்போது சாமியாருக்கும் எனக்கும் என்ன உறவு என்று சர்ச்சை கிளம்பலாம். சாமியாருக்கு நான் பக்தை. சாமியாருக்கு நான் சேவகி. சாமியாருக்கு நான் காதலி. சாமியாருக்கு நான் வேசி. சாமியாருக்கு நான் அடிமை. எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள். ஆனால் உன் மனைவியோடு நீ புணர்கிற இரவுகளில் எல்லாம், அவள் உன்னை தான் காதலோடு, தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்ற உன் ஆதாரமில்லாத நம்பிக்கையில் தான், அவளுடைய கற்பும் உன்னுடைய ஆண்மை ததும்பும் ஆவணவும் காப்பாற்றப்படுகிறது என்று எப்போது நீ உணரப்போகிறாய்.

சாமியார் ஊருக்கு உபதேசம் செய்தார். அதை எல்லோரும் நம்பினார்கள். அது பொய். சாமியார் போலி என்பதை ஊருக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவருடைய படுக்கை அறை எத்துனை கேவலமானது என்பதை ஊருக்கு உணர்த்தும் பொருட்டு இந்த நாடகத்தை நீ அரங்கேற்றுகிறாய். அதில் என்னையும் நிர்வாணமாக்கிவிட்டாய். போகட்டும். என் பொருட்டு சாமியாரை கடவுளாக வழிபடும் மக்கள் திருந்தினால் அதற்கு என் யோனி பயன்பட்டிருக்கிறது என்பதால் நான் பெருமை தான் படுகிறேன்.

அதே நேரம் உன் வீட்டில் துர்நாற்றம் வீசுகிறது. என்னவென்று ஆராய்கிறாய். வீட்டில் ஒரு மூலையில் கழிவு நீர் கசிகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அடடா என் வீட்டில் எப்படி கழிவு நீர்? இது எங்கிருந்து வருகிறது என்று தேட தொடங்குகிறாய். பிறகு ஒரு நாள் அது என்னுடைய வீட்டிலிருந்து தான் வருகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்ட தீர்மானிக்கிறாய். அதற்காக நான் என் வீட்டு கழிவறையில் சிறுநீர் கழிப்பதை ரகசியமாய் படம்பிடித்து ஊருக்கு காட்டி என் வீட்டில் ஒழுகும் கழிவு நீர் இது வழியாகத்தான் வருகிறது என்று நான் சிறுநீர் கழிக்கும் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து நிரூபிக்கிறாய். சாமியாரை காட்டிக்கொடுக்க என்னை ஒரு கருவியாய் பயன்படுத்தினாய் இந்த கருவிக்கும் சதை உயிர் மயிர் மானம் சமுதாயம் வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதென்பதை நீ ஏன் மறந்து போனாய்.
நடிகைக்கு எதற்கு மானம். அதுவும் ஒரு சாமியாரோடு படுக்கையில் புரளும் நடிகைக்கு எதற்கு மானம் என்று நீ முடிவெடுத்துவிட்டாயா?
நான் நடிகையாய் இருப்பது முழுக்க முழுக்க என் குற்றம். ஆனால் நீ நடித்துக்கொண்டிருக்கிறாய் என்பதை எப்போது உணரப்போகிறாய்.

நீ குறித்துக்கொள். நிச்சயம் நீ பழி தீர்க்கப்படுவாய். என் பொருட்டு ஏதாவது ஒரு பெண் உன்னை பழி வாங்குவாள். அந்த இரண்டு இரவுகளையும் என் மனதிலிருந்து அழிக்க முடியாது. ஆனால் ஒன்றை புரிந்துகொள் இனி மேல் நடிகைகளாகிய எங்களின் வளங்களை இரசிக்கும், தனங்களை ரசிக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் ரசிகனாக பார்க்க மாட்டோம். எங்கள் செருப்புக்கு இணையாகவே மதிப்போம்.

நன்றி,
ரஞ்சிதா.

மேலுள்ள கடித்தத்தை நாங்கள் எங்கே இருந்து எடுத்தோம் என்பதை அறிய விரும்பினால், இங்கே அழுத்துங்கள்.

மீனா படங்களில் தொடர்ந்து நடிப்பார்.

குழந்தைப் பருவத்திலேயே அறிமுகமாகி நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை மீனா. இவரின் பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அண்மையில் திருமணம் முடித்த மீனா தொடர்ந்து படங்களில் நடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. தனது தாம்பத்திய வாழ்க்கையை குழப்பாதபடி படங்களில் நடிக்க மீனா திட்டமிட்டுள்ளார்.

மீனாவின் நெருங்கிய வட்டாரங்களின் கூற்றுப்படி, ஒரு வருடத்தில், ஒரு தமிழ்ப் படம், ஒரு மலையாளப் படம் மற்றும் ஒரு கன்னடப் படம் மட்டுமே நடிக்கும் எண்ணத்தில் மீனா இருக்கிறார். இந்த மொழிகளில் இருந்து மீனாவிற்கு வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன என்றும், தெலுங்கில் நல்ல வாய்ப்பு வந்தால் அதிலும் அவர் நடிக்கலாம் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறினர்.

வருடத்தில் மூன்று அல்லது நான்கு படங்களில் நடிப்பது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காது என்றும், இந்த முடிவை மீனா தனது கணவருடனும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுடனும் கலந்தாலோசித்த பின்னரே எடுத்தார் எனவும் அவர்கள் கூறினர்.

மீனாவின் நடிப்பு ஆசையில் அவரது கணவர் குறுக்கிடவில்லை என்றும் மீனா தானாகவேதான் தனது திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்ததாகவும் கூறிய அவர்கள், மீனா தற்போது தம்பிக்கோட்டை எனும் தமிழ் படத்தில் நடிப்பதாகவும் மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகவிருப்பதாகவும் மேலும் கூறினர்.

சுருதி ஹாசானின் கன்னட பாடல்.

IndiaGlitz இலிருந்து இந்தப்படம் எடுக்கப்பட்டது.

உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் சுருதி ஹாசன் கன்னட பாடல் ஒன்றை பாடியுள்ளார். சுருதி ஒரு பாடகியாக மட்டுமல்ல, நடிகையாகவும் இசையமைப்பாளராகவும் அறியப்பட்டவர். "Prithvi" படத்திற்காக சுருதி ஒருபாடலை படுகிறார். இந்தப் பாடத்தை சூரப்பா பாபு மற்றும் NS ராஜ்குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். இயக்குனர் ஜக்கோப் வெர்கீஸ். இசையமைப்பாளர் மணிகாந்த் காத்ரி. புனீத் ராஜ்குமார் நடிக்கும் இந்தப்படத்தில் பார்வதி மேனனும் நடிக்கிறார்.

கடந்த ஞாயிறு மாலை மும்பையிலுள்ள பிரதர்ஸ் ஸ்டுடியோவில் இந்தப் பாடல் பதியப்பட்டது. "நினைப்பிது நினைப்பிது" எனும் பாடலே சுருதியால் பாடப்பட்டுள்ளது. படத்தில் பார்வதி மேனன் இந்த பாடல் காட்சியில் தோன்றுகிறார். பாடலை பாட வந்த சுருதி ஹாசனை படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

ப்ரித்வி படத்தின் தயாரிப்பாளர்கள், சுருதி ஹாசனுடன் கன்னட படங்களில் ஹீரோயின் ஆக நடிப்பது பற்றியும் கலந்துரையாடினார். நல்ல கதையாக இருந்தால் அதுபற்றி யோசிப்பதாக ஸ்ருதி கூறியிருக்கிறார்.

Monday 8 March 2010

"பையா" பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்கள்

லிங்குசாமியின் இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னாவின் "பையா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களில் சில...

பையா படத்தின் காட்சிகளை பார்க்க இங்கே அழுத்தங்கள்.

Sunday 7 March 2010

நித்தியானந்தவிற்கு ஆண்மைக்குறைவா?


நித்தியானந்தாவின் காம லீலைகள் வீடியோவாக சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்ததும் சில ஊடகங்கள் அச்செய்தியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி தமது வருமானத்தைப் பெருக்கிக்கொண்டதும் கடந்த வாரத்தில் நடந்த சூடான சங்கதி என்பது யாவரும் அறிந்ததே. நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும், சாமியாரின் ஆச்சிரம ஓய்வெடுக்கும் அறையில் உல்லாசமாக இருந்தபோதே அந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. அதுவும், இரண்டு காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டிருந்தன. ஒரு நாள் சாறியுடனும் அடுத்த நாள் சல்வாருடனும் நடிகை ரஞ்சிதா காட்சியளித்திருந்தார். 

இந்த வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்திருந்தால், அதில் நடிகை ரஞ்சிதா, எதோ ஒரு மாத்திரையை சாமியாருக்கு கொடுப்பதை அவதானித்திருப்பீர்கள். செய்திச் சேவை ஒன்றில் இந்தக் காட்சி ஒளிபரப்பப்பட்ட போது, செய்தி வாசிப்பாளர், எதோ ஒரு மாத்திரை நித்தியானந்தாவிற்கு கொடுக்கப்படுவதாகவே அந்தக் காட்சியை வர்ணிக்கின்றார். அப்படியானால், அது என்ன மாத்திரை? எதற்காக நித்தியானந்தா அதை உட்கொள்கிறார்?
மனதில் தோன்றும் சில கேள்விகள், 
1. நிதியானந்தாவிற்கு ஏதேனும் வியாதி இருக்கிறதா?
2. அப்படியே வியாதி இருந்தாலும், ஏன் ரஞ்சிதா வந்து மாத்திரையை கொடுக்கும் வரை காத்திருந்தார்?
3. அது ஆண்மையைத் தூண்டுவதற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரையா?

பொதுவாக, நோய்களுக்கு மாத்திரை எடுக்கும் போது, தனியொரு மாத்திரையை எடுத்துக்கொள்வது அரிது. ஒன்றிற்கு மேற்பட்ட மாத்திரைகளை எடுப்பதே வழமை. அடுத்தது, நோய்க்கான மாத்திரையாகவிருந்தால், ரஞ்சிதா வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நித்தியானந்தா, தானாகவே எடுத்து உட்கொண்டிருக்கலாம் அல்லது வேறு யாராவது எடுத்துக்கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த வீடியோ காட்சியை வைத்துப்பார்க்கும் போது, விளக்கு அணைக்கப்படுவதற்கு (ஏன் அணைத்தார்கள் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை) சில நிமிடங்களுக்கு முன்னதாகவே அந்த மாத்திரை எடுக்கப்படுகிறது. அதுவும், ரஞ்சிதா வந்த பின்னர்தான் மாத்திரை எடுக்கப்படுகிறது. 

இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, அந்த மாத்திரை, ஆண்மையை தூண்டுவதற்காக எடுக்கப்படும் மாத்திரையா எனும் எண்ணம் வலுப்பெறுகிறது. அப்படியானால் நித்தியானந்தா ஆண்மைக்குறைபாடுடையவரா? நடிகை ரஞ்சிதாவிற்கு வேறு எவருமே கிடைக்கவில்லையா?

தினகரனில் வெளியாகியுள்ள வீடியோவை பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள்

சூடான பக்கத்தை உங்கள் சூடான கருத்துக்களால் மேலும் சூடாக்குங்கள் வாசகர்களே..!

த்ரிஷாவின் திடீர் முடிவு

த்ரிஷா நடித்து அண்மையில் வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. த்ரிஷா மிகவும் சந்தோசத்திலிருக்கிறார். இந்தப் படத்தில் த்ரிஷா, ஜெஸ்ஸி எனும் வேடத்தில் நடித்திருக்கிறார். த்ரிஷாவின் ஜோடியாக சிம்பு, கார்த்திக் எனும் வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் ஹைலைட் ஆக சிம்பு - த்ரிஷா முத்தக் காட்சிகள் அமைந்திருந்தன. அப்படி நடித்ததில் தப்பேதுமில்லை என த்ரிஷா கூறியிருந்தார்.

ஆனால் இப்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வந்த வேறு ஒரு விடயத்தை இனி வேறு எந்தப்படத்திலும் செய்யப்போவதில்லை என த்ரிஷா முடிவெடுத்திருக்கிறார். அது என்ன தெரியுமா? விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா ஒரு வயது கூடிய பெண்ணாக அதாவது ஹீரோவிலும் பார்க்க வயது கூடிய பெண்ணாக நடித்திருந்தார். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோவிலும் பார்க்க வயது கூடிய ஹீரோயின்கள், உயரம் கூடிய ஹீரோயின்கள் போன்ற பாத்திரங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் இவ்வாறான வயது கூடிய பாத்திரங்களில் இனிமேல் நடிப்பதில்லை என த்ரிஷா முடிவெடுத்திருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் வயது கூடிய பெண் ஆக நடிக்க முதலில் மறுத்திருக்கிறார். ஆனால் இயக்குனர் கெளதம் மேனன், படத்திற்கு இவ்வாறான ஒரு பாத்திரம் தேவை என ஒருவழியாக த்ரிஷாவிற்கு எடுத்துக் கூறி, த்ரிஷாவை சம்மதிக்கவைத்திருந்தார். எனினும், அவ்வாறான பாத்திரங்கள் இனி நடிப்பதில்லை என்ற முடிவிற்கு த்ரிஷா வந்திருக்கிறார்.

Saturday 6 March 2010

சுறா சூட்டிங் ஸ்பாட்டில் சுடப்பட்ட படங்கள்

சுறா சூட்டிங் ஸ்பாட்டில் சுடப்பட்ட படங்கள்.






எழுத்தாளர்களைப் பேட்டி எடுக்கிறார் கமல்....

கமல், சினிமாத்துறையில் மட்டுமல்ல, இலக்கியத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். அவர் மய்யம் என்ற பத்திரிகையை சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடத்திவந்தார். அவரது நோக்கம் தனது இரசிகர்களை இலக்கியத்தின் பக்கம் இழுப்பதாகவே அமைந்திருந்தது. தனது பிறந்த நாளில் இலக்கியவாதிகளை வரவழைத்து அவர்களது சொற்பொழிவுகளை தனது ரசிகர்களை வலுக்கட்டாயமாக கேட்கவைப்பது கமலின் வாடிக்கை. என்ன காரணத்தினாலோ, மய்யம் பத்திரிக்கை சில ஆண்டுகளாக வெளியிடப்படவில்லை.

இப்போது, மய்யம் இதழை, மின்னிதழாக மீண்டும் கொண்டுவருவதில் தீவிர கவனம் செல்லுத்துகிறார். மின்னிதழிலும் இல்லக்கியவாதிகளின் பங்களிப்பை எதிர்பார்க்கிறார் கமல். இதற்காக எழுத்தாளர்களை பேட்டிகாண நினைத்த கமல், அதை தானே செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என எண்ணி, இப்போது எழுத்தாளர்களை தேடிக்கொண்டிருக்கிறார். இதற்காகவே ஒருபகுதி நேரத்தை ஒதுக்கியிருக்கிறார். அவரது இந்த முயற்சி வாசகர்களை மேலும் கவரும் என்பதில் ஐயமில்லை.

தமிழக எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல், கேரளா எழுத்தாளர்களையும் கமல் தேடிச் செல்லப் போகின்றாராம். கமல் முதலில் பேட்டி எடுத்த எழுத்தாளர், நீல.பத்மநாபன் அவர். விரைவில் மய்யம் மின்னிதழை இணையத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

ரஞ்சிதா நடிகர் சங்கத்தில் சேரவேயில்லை : சரத்குமார்

நடிகை ரஞ்சிதாவிற்கும் நித்தியானந்தாவிற்கும் இடையில் இருந்த தொடர்புகளை Sun News தொலைக்காட்சியும், தினகரன் பத்திரிகையும் அம்பலப்படுத்தியதும், அதன்பின்னர் இருவரும் மாயமாகிவிட்டதும் யாவரும் அறிந்த விடயம். இருவரும் எங்கே இருக்கிறார்கள் என தெரியாததால் ஒவ்வொருவரும் தத்தமது அறிவிற்கு எட்டியதுபோல் ஊகங்களைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை ரஞ்சிதாவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவீர்களா என சரத்குமாரிடம் கேட்கப்பட்டதற்கு, "அவர், நடிகர் சங்கத்தில் சேரவேயில்லை. அப்படியிருக்கும் போது நாங்கள் எப்படி அவரை நீக்குவது?" என பதிலளித்திருக்கிறார்.

Friday 5 March 2010

சாமியார்களை நம்பாத த்ரிஷா ... !


விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விண்ணைத்தாண்டி வருவாயா நாயகன் சிம்பு, நாயகி த்ரிஷா, படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்தச் சந்திப்பில் த்ரிஷாவிடம் சினிமாவைத் தவிர வேறு சில கேள்விகள் கேட்கப்பட்டன. 

கேள்வி: எந்த சாமியார்களிடமாவது ஆசிர்வாதம் வாங்கியிருக்கீறீர்களா?
பதில்: மனிதனை கடவுளாக நினைக்க மாட்டேன். எந்த சாமியாரிடமும் இதுவரை நான் ஆசிர்வாதம் வாங்கியதில்லை. சாமியார்களை நான் நம்புவதில்லை. 

கேள்வி: நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் வெளிவருகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: மீடியா என்பது பவர்ஃபுல் விஷயம். அதைப் பார்த்து பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் பிரபலமானவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றார்.

சமாதானமா போக நான் புறா இல்லடா.... சுறா !

"சமாதானமா போக நான் புறா இல்லடா...சுறா !", இதுதான் விஜயின் புதிய பஞ்ச் டயலாக். விஜயும் பஞ்ச் டயலாக் உம் இணை பிரியாத நண்பர்கள் போல. பஞ்ச் டயலாக் இல்லாத விஜயின் படமே இல்லை என கூறலாம். S.P.ராஜ்குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் விஜயின் 50 வது படமான 'சுறா'வில் மேற்கூறப்பட்ட பஞ்ச் டயலாக் இடம்பெறுவதாகவும், வேறு சில பஞ்ச் டயலாக்குகளும்  சுறாவில் இருக்குமெனவும் ஒரு கதை அடிபடுகிறது.

சுறா படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் அதேவேளை விஜயை காதலிக்கும் கல்லூரி மாணவியாக தமன்னா நடிக்கிறார். காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகன் இந்தப்படத்தை தயாரிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்தப்படத்தை வெளியிடுகிறது.

'தல' அஜித்தின் பிரச்சனை நீதிமன்றத்தில்.....

அண்மையில் நடந்த முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவில் நடிகர் அஜித்குமார் தையிரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்ன கருத்துக்களுக்காக பலரும் அவரது பேச்சை எதிர்க்கும் வகையில் கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். இந்த வரிசையில் ஜக்குவார் தங்கமும் சில கருத்துக்களைக் கூறியதால், அவரின் வீடு அஜித்தின் ரசிகர்களால் தாக்கப்பட்டது அனைவரும் அறிந்த விடயம். பின்னர் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயங்கள், அஜித், கருணாநிதியை சந்தித்துப் பேசிய பின்னர் தணிந்த்திருந்தன. ஜக்குவார் தங்கத்தின் பிரச்சனையும் சுமுகமாக முடிந்தது போல் இருந்தது. ஆனால் பூதம் மறுபடியும் வெளிக்கிளம்புகிறது.

ஜாக்குவார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அஜித் மற்றும் அவரது மனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர்தான் தனது வீடு தாக்கப்பட்டதற்கு காரணமானவர்கள் எனவும், தான் MGR போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை என்றும் மனு ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார். ஜக்குவாரின் மனுவை ஏற்ற நீதிபதி, போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் ஏன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என இரண்டு கிழமைக்குள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அஜித் குமாரின் கருத்துக்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவு தெரிவித்தார் என்பதும் அவரும் பின்னர் கண்டனங்களுக்கு உள்ளானார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரஜினி தேடிய கேமராமேன்...!

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த ரஜினி, அப்படத்தின், நடிகர், நடிகைகள், ஏனைய படக்குழுவினர் எல்லோரையும் மனசார வாழ்த்தியுள்ளார். "எங்கே அந்த கேமராமேன்? கூப்பிடுங்க அவரை." என்று கணேஷை தேடிய ரஜினி அவரை பாராட்டினார். கணேஷ்தான், காக்கக் காக்க படத்தின் படப்பிடிப்பாளர் என நினைத்தாராம். கணேஷ், 'காக்கக் காக்க கேமராமேன்' பாத்திரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருந்தார். காக்கக் காக்க படத்தின் உண்மையான படப்பிடிப்பாளர், R.D.ராஜசேகர். பின்னர் இந்த விடயம் ரஜினிக்கு சொல்லப்பட, 'அட... பிரமாதம்பா... நிஜமான கேமராமேனே இவர்தான்னு நினைச்சிட்டேன். ஃபெண்டாஸ்டிக்..' என்று, ஆச்சரியமாக கூறினாராம்.


இயக்குனர் கெளதம் மேனன் இதுபற்றி கூறியது, "கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்தப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார் ரஜினி சார். அவரது பெரிய மனதைக் காட்டியது அது. ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமா ஒரு படம் பார்த்தேன்னார்". கெளதம் மேனன் மேலும் கூறுகையில், "இப்போ எனக்கே என் படம் மீது புதிய மரியாதை பிறந்திருக்கிறது. நிச்சயமாக விமர்சகர்கள் குடிப்பிட்டு கூறிய குறைகளை எனது அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன்". என கூறினார்

பாவனாவின் கல்யாணம்.....

ஒரு பத்திரிக்கை, பாவனா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக செய்தி வெளியிட்ட போது, தனது கைத்தொலைபேசி, தொடர்ந்து சினுங்கிக்கொண்டிருந்ததாக பாவனா கூறினார். தனது திருமணம் பற்றி பாவனா மேலும் கூறியதாவது, "என்னவிடயம் என்றே தெரியாமல் சிலர் என்னை வாழ்த்தினார்கள். தொலைபேசியில் கதைத்த சிலர், எனக்கு இன்னும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றால் தாங்கள் என்னை கல்யாணம் பண்ண ஆயத்தமாகவிருப்பதாக கூறினர்.

இவ்வாறன கேள்விகளுக்கு பதிலளிப்பதிலும் பார்க்க, கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் போலத் தோன்றுகிறது எனக்கு. இந்த வதந்திகளுக்கெல்லாம் காரணம், கோபிகா, நவ்யா நாயர் ஆகியோர் கல்யாணம் செய்துவிட்டனர். எனவே மக்கள் நினைக்கிறார்கள் அடுத்ததாக நான் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று. எனது பெற்றோர் இன்னும் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கக்கூட இல்லை. இரண்டு வருடங்களுக்கு பின்தான் திருமணம் செய்துகொள்வேன். அதுவும் முன் பின் அறிமுகமில்லாத ஒருவரை திருமணம் செய்யமாட்டேன். எனது திருமணத்தைப்பற்றி நான் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. காதல் திருமணமோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, மிகப் பெரிதாகத்தான் எனது திருமணம் நடைபெறும்.

நிச்சயமாக அறிவித்தலேதும் இல்லாமல் அவசரமாக கல்யாணம் பண்ண மாட்டேன். இந்த விடயம் பற்றி நான் மிகையும் தெளிவாக இருக்கிறேன். என்னைக் கல்யாணம் செய்கிறவர், எனக்கு தெரிந்தவராக, எனது நெருங்கிய நண்பராக, எல்லாவற்றையும் என்னுடன் பகிர்ந்துகொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்.

அசல் படத்திற்கு பிறகு புனித் ராஜ்குமாருடன் கன்னட மொழிப் படமொன்றில் நடிக்கிறேன். அசல் வெளிவந்த பின்னர், எனக்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால் நிறைய தமிழ் படங்கள் என்னைத் தேடி வருகின்றன. எனினும், எந்தவொரு தமிழ் படத்திலும் இன்னும் ஒப்பந்தமாகவில்லை" என பாவனா மேலும் கூறினார்.

Thursday 4 March 2010

பாவனாவின் ஜக்கி.

பாவனாவின் ஜக்கி திரைப்படம் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு கன்னட மொழிப் படம். ஜக்கிதான் பாவனாவின் முதலாவது கன்னட மொழிப் படம். இந்த படத்தில் பாவனாவிற்கு, அப்பாவிப் பெண் வேடம் வழங்கப்பட்டுள்ளது. வெயில் படத்தில் வரும் பாவனாவின் பாத்திரத்தைப்போலவே ஜாகியிலும் பாவனாவின் பாத்திரம் அமைந்துள்ளது. பூர்ணிமா என்டபிரைசஸ் இந்தப் படத்தை தயாரிக்கின்றது.

கன்னட திரையுலகின் பிரபலமான நடிகர் புனீத் ராஜகுமாருக்கு ஜோடியாக பாவனா இந்தப்படத்தில் நடிக்கிறார். "நான் லக்ஷ்மி எனும் அப்பாவிப்பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகளில் பாவாடை தாவணியிலும் சுடிதாரிலும் தான் தோன்றுவேன்" என இந்தப் படம் தொடர்பாக பாவனா கூறினார். முதலாவது படத்திலேயே ராஜகுமாருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் பாவனாவிற்கு கன்னட சினிமா துறையிலும் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமுண்டு. அண்மையில் வெளிவந்த அசல் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாவனா பிரமாதமாக நடித்திருந்தார். இது, கன்னட ரசிகர்களிடையே ஜக்கி படத்தைப்பற்றிய எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ரஞ்சிதாவின் சூடான படங்கள்.

ரஞ்சிதாவின் சூடான படங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog