Friday 5 March 2010

ரஜினி தேடிய கேமராமேன்...!

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த ரஜினி, அப்படத்தின், நடிகர், நடிகைகள், ஏனைய படக்குழுவினர் எல்லோரையும் மனசார வாழ்த்தியுள்ளார். "எங்கே அந்த கேமராமேன்? கூப்பிடுங்க அவரை." என்று கணேஷை தேடிய ரஜினி அவரை பாராட்டினார். கணேஷ்தான், காக்கக் காக்க படத்தின் படப்பிடிப்பாளர் என நினைத்தாராம். கணேஷ், 'காக்கக் காக்க கேமராமேன்' பாத்திரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்திருந்தார். காக்கக் காக்க படத்தின் உண்மையான படப்பிடிப்பாளர், R.D.ராஜசேகர். பின்னர் இந்த விடயம் ரஜினிக்கு சொல்லப்பட, 'அட... பிரமாதம்பா... நிஜமான கேமராமேனே இவர்தான்னு நினைச்சிட்டேன். ஃபெண்டாஸ்டிக்..' என்று, ஆச்சரியமாக கூறினாராம்.


இயக்குனர் கெளதம் மேனன் இதுபற்றி கூறியது, "கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்தப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார் ரஜினி சார். அவரது பெரிய மனதைக் காட்டியது அது. ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமா ஒரு படம் பார்த்தேன்னார்". கெளதம் மேனன் மேலும் கூறுகையில், "இப்போ எனக்கே என் படம் மீது புதிய மரியாதை பிறந்திருக்கிறது. நிச்சயமாக விமர்சகர்கள் குடிப்பிட்டு கூறிய குறைகளை எனது அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன்". என கூறினார்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog