Sunday 7 March 2010

த்ரிஷாவின் திடீர் முடிவு

த்ரிஷா நடித்து அண்மையில் வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. த்ரிஷா மிகவும் சந்தோசத்திலிருக்கிறார். இந்தப் படத்தில் த்ரிஷா, ஜெஸ்ஸி எனும் வேடத்தில் நடித்திருக்கிறார். த்ரிஷாவின் ஜோடியாக சிம்பு, கார்த்திக் எனும் வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் ஹைலைட் ஆக சிம்பு - த்ரிஷா முத்தக் காட்சிகள் அமைந்திருந்தன. அப்படி நடித்ததில் தப்பேதுமில்லை என த்ரிஷா கூறியிருந்தார்.

ஆனால் இப்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வந்த வேறு ஒரு விடயத்தை இனி வேறு எந்தப்படத்திலும் செய்யப்போவதில்லை என த்ரிஷா முடிவெடுத்திருக்கிறார். அது என்ன தெரியுமா? விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா ஒரு வயது கூடிய பெண்ணாக அதாவது ஹீரோவிலும் பார்க்க வயது கூடிய பெண்ணாக நடித்திருந்தார். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஹீரோவிலும் பார்க்க வயது கூடிய ஹீரோயின்கள், உயரம் கூடிய ஹீரோயின்கள் போன்ற பாத்திரங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் இவ்வாறான வயது கூடிய பாத்திரங்களில் இனிமேல் நடிப்பதில்லை என த்ரிஷா முடிவெடுத்திருக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் வயது கூடிய பெண் ஆக நடிக்க முதலில் மறுத்திருக்கிறார். ஆனால் இயக்குனர் கெளதம் மேனன், படத்திற்கு இவ்வாறான ஒரு பாத்திரம் தேவை என ஒருவழியாக த்ரிஷாவிற்கு எடுத்துக் கூறி, த்ரிஷாவை சம்மதிக்கவைத்திருந்தார். எனினும், அவ்வாறான பாத்திரங்கள் இனி நடிப்பதில்லை என்ற முடிவிற்கு த்ரிஷா வந்திருக்கிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog