Wednesday 3 March 2010

நித்யானந்தா தலைமறைவு!

நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலையில் இருந்தவேளை வீடியோ படம் பிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாமி (?) நித்தியானந்தா தலைமரைவாகீவிட்டார். அவரது ஆச்சிரமங்கள் பல பக்த கேடிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகளையும் படங்களையும் வீடியோ காட்சிகளையும் எமது வாசகர்களுக்காக இங்கே தந்திருந்தோம். இதன் தொடர்ச்சியாக, தினகரனில் வெளிவந்த புதிய செய்தியையும் உங்களுக்காக இங்கே தருகிறோம்.

தினகரனில் வெளியாகியுள்ள செய்தி:


நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலைகள் : நித்யானந்தா தலைமறைவு!

சென்னை: பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் நித்யானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் நடத்தி வருபவர் பரமஹம்ச நித்யானந்தா (31). தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை உள்பட பல நகரங்களிலும் இவரது ஆசிரமங்கள் உள்ளன. உலகின் பல நகரங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இந்நிலையில், பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படுக்கை அறை வீடியோ காட்சிகள் நேற்று வெளியாயின. இது பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர். ஆசிரமத்துக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பதற்றம் அதிகரித்ததால், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 45 ஊழியர்கள் நேற்று நள்ளிரவு நித்யானந்தாவின் பேனர்கள், போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினர். ஆசிரமத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரான தி.மலையில் ஆசிரமம் அமைக்க நித்யானந்தா ஆசைப்பட்டார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர் தங்க சொகுசு அறையுடன் கட்டிடம் கட்டப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும்போது அங்குதான் தங்குவார். கடந்த ஜனவரி 8&ம் தேதி பிறந்தநாள் விழாவை இங்கு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில், ‘‘ஆடம்பர வாழ்க்கை வாழும் நித்யானந்தர் கிரிவலப்பாதையில் ஆசிரமம் கட்டக் கூடாது என்று ஏற்கனவே கூறினோம். அவரது சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். தி.மலைக்குள் அவரை இனி விடமாட்டோம்’’ என்றார். புதுச்சேரி வில்லியனூர் ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்தை பொதுமக்கள் சூறையாடினர். ஜன்னல்கள், விளக்குகள், மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாமியார் பேனரை தீவைத்து கொளுத்தி செருப்பால் அடித்தனர். பதற்றம் அதிகரித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இந்து முன்னணி அமைப்பினர் மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நித்யானந்தாவை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மோகினிபாலம் பகுதியில் ஆசிரமத்தின் பெயர்பலகையை பொதுமக்கள் தார்பூசி அழித்தனர். நெல்லை டவுனில் உள்ள நித்யானந்தர் தியான மையத்தில் நித்யானந்தா படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், போஸ்டர்களை நிர்வாகிகளே கிழித்து எறிந்தனர். இந்த மையத்தில் சில மாதம் முன்பு அவர் ஆன்மீக உரையாற்றியுள்ளார். சீர்காழி சட்டநாதபுரம் மனோன்மணியம் நகரில் நித்யானந்த பீடத்தை அவர் சமீபத்தில் திறந்துவைத்தார். இங்கு தினமும் பஜனை, தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. டிவியில் ஆபாச காட்சிகளை பார்த்த மக்கள் ஆவேசமடைந்து நித்யானந்தா படங்கள், பேனர்களை நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர்.


தினகரனில் வெளியாகியுள்ள வீடியோவை பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள்


2 comments:

Subu said...

ஆக மொத்தம் குடும்பத்தான் மட்டுமில்லை, சன்யாசிக்கு கூட பெண்களால் தான் அழிவு போலக்கீது !! என்னாவோ போ

சி டி யில இருப்பது சாமி நித்யானந்தர் தானான்னே தெரியெல்லை

அப்படியே அவர்தான்னு சொன்னானும் சாமியார் தப்பு பண்ணுனார்னு கோர்ட்டில நிரூபணம் ஆயிடிச்சா ?

சாமியார் என்னா தப்பு பண்ணிட்டார்னு அவரோட ஆஸ்ரமத்துக்கெல்லாம் போலீஸ் ரெய்டோ தெரியெல்லை. பக்தர்களை காலி பண்ண சொல்லுறாங்களாம் போலீஸ்...ஐயோ பாவம் சாமியார்...அதைவிடப்பாவம் பக்தர்களும் சிப்பந்திகளும்

சாமியார் பண்ணினது ஆசாரத்துக்கோ,சன்யாஸ்ரம தர்மத்துக்கோ எதிர்ன்னு சொன்னா அது அவர் பாடு அவர் பக்தர்கள் பாடு... போலீஸுக்கு என்னாய்யா வந்திச்சு ? போலீஸ் என்னா இந்து சாஸ்திர நிபுணர்களா ? இந்து மதக் காவலர்களா ?

இணக்கத்துடன் பாலுறவு தப்புன்னா பலர் வீட்டுக்கும் போலீஸ் ரெயிடு போக வேண்டி வருமே !!

இந்தக்கூத்தில நாத்திகக் கும்பலோட பங்கென்னான்னு தெரியெல்லை

http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html

Subu said...

சாமி நித்யானந்தா எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சுட்டாருங்க ..

வீடியோவைப் பாருங்க

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_11.html

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog