Saturday 13 March 2010

சிம்புவால் மனம் மாறிய சிங்கப்பூர் பெண்....!!!

அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் நாயகன் சிம்பு, ஒரு சிங்கப்பூர் பெண்ணின் மனதை மாற்றிய சந்தோசத்திலிருக்கிறார். மனம் மாறிய பெண், பிரபலமான ஒரு சமூக இணையத்தளத்தில் வெளியிட்ட படைப்பாலேயே இந்த தகவல் வெளிவந்துள்ளது.

சிங்கப்பூர் இல் வசிக்கும் ஒரு பெண் சில காரணங்களுக்காக தனது காதலனை பிரிந்திருந்தார். சிம்பு நடித்த விண்ணைதாண்டி வருவாயா படத்தை பார்த்து தான் தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும், தனது காதலனுடன் மீண்டும் இணையப்போவதாகவும் அந்த சமூக இணையத்தில் தெரிவித்திருக்கிறார். அத்துடன் சிம்புவிற்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி நடிகர் சிம்புவிடம் கேட்டபோது, பெரிய புன்னகையுடன் அவர் சொன்ன பதில் : "என் நடிப்பால் ஒரு பெண்ணின் மனதை மாற்ற முடியுமென்பது ஆச்சரியமளிக்கிறது. சந்தோசப்படும் அதேவேளை கௌரவிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன்". இது தொடர்பாக படத்தின் இயக்குனர் கெளதம் மேனன் கூறியதாவது : "கிடைக்கும் பெருமையெல்லாம் சிம்புவையே சாரும்".

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog