Showing posts with label ரஞ்சிதா. Show all posts
Showing posts with label ரஞ்சிதா. Show all posts

Saturday, 13 March 2010

ரஞ்சிதாவின் ஆயில் மசாஜ் சேவை.....!!!

சுவாமி நித்தியானந்தா - நடிகை ரஞ்சிதாவின் காம லீலை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நித்தியானந்தாவோ தான் சட்டப்படி எந்தவொரு குற்றமும் செய்யவில்லை என தெரிவித்திருந்தார். மேலும், அவர் பிரத்தியேகமாக வழங்கிய பேட்டியில் இந்த விடயத்தை தவிர்த்து ஏனையவற்றை மட்டும் பேசியிருந்தார். இதேவேளை நடிகை ரஞ்சிதாவோ தான் சுவாமிக்கு சேவைதான் செய்ததாக கூறியிருந்தார்.

இரண்டரை மணித்தியாலங்களுக்கு ஓடக்கூடிய வீடியோவை லெனின் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்ட போதும், கிட்டத்தட்ட இருபது நிமிட காட்சிகளே வெளிவந்திருந்தன. இப்போது புதிதாக நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவிற்கு ஆயில் மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளிவந்திருக்கிறது. You Tube இலிருந்து அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


Wednesday, 10 March 2010

பகிரங்க கடிதம் : "நான் ரஞ்சிதா பேசுறேன்"

நடிகை ரஞ்சிதா - சுவாமி நித்தியானந்தா சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. சட்டப்படி தானோ அல்லது தனது அமைப்போ எந்த தவறும் செய்யவில்லை என்று நித்தியானந்தா கூறியிருந்தார். இப்போது, நடிகை ரஞ்சிதா பகிரங்கமாக எழுதிய கடிதம் எனும் தலைப்பில் சில மின் ஊடகங்களில் ஒரு உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்தை, சிலர் மின் அஞ்சல் மூலமாகவும் பரப்பிவருகின்றனர். எமது வாசகர்கழுக்காக அந்தக் கடிதம் இங்கே தரப்படுகிறது. எனினும், இந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. அதாவது யாரால் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை.


ரஞ்சிதாவின் கடிதம்
------------------------------

நான் இனி அழப்போவதில்லை. ஆண்களே, நான் அழும் கண்ணீரில் கூட சாராய போதை கிடைக்கிறது உங்களுக்கு..

காரணம் நான் ஒரு நடிகை. உடலை காட்டி பிழைப்பவள். அப்படித்தான் பிழைத்தேன்.

வரிசையாக கப்பம் கட்டிவிட்டு என் உடலை பார்க்க வந்த நீங்கள் எல்லாம் பரிசுத்தமாகிவிட்டீர்கள்.

உன் தங்கையின் ஜாக்கெட்டில் இரண்டு பட்டன்களை தளர்த்தி அவளை அறுபது டிகிரிக்கு குனிய வைத்து போட்டோகிராபருக்கு போஸ் கொடுக்க சொல்வாயா? சொல்ல மாட்டாய். காரணம் உனக்கு அந்த பிழைப்பு விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம் அல்லது உன் தங்கைக்கு அது அறுவறுப்பானதாய் தெரிந்திருக்கலாம் அல்லது உன் தங்கையை அந்த கோலத்தில் யாரும் பார்க்க பிரியப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது நீ உயர் குடியில் பிறந்தவனாக இருக்கலாம்.

நண்பா ஒன்றை நினைவில் கொள்…உன் போல் உயர் குடியில் பிறந்த பலருக்காக கீழ் குடியில் பிறந்த என் தனங்கள் தாழ்ந்தன. உன் போல் மேல் குடியில் பிறந்த எத்தனையோ பேருக்காக என் கீழ் குடி கதவுகள் திறந்தே இருந்தன.

நான் என் சதையை காட்டி சினிமாவில் பணம் சம்பாதித்தேன் என்பது உன் மேலோட்டமான குற்றச்சாட்டாக இருக்கலாம். யார் யாரோ பார்ப்பதற்காக என் மார்பையும் மச்சத்தையும் சில சமயம் ஒட்டு மச்சங்களையும் மாராப்பையும் விலக்கி காட்டினேன். அதை உன் பாஷையில் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் “அப்படி காட்டியவள் தானே இவள்” என்ற அலட்சியத்தில் தானே என் யோனியை கிளோஸ் அப்பில் படம் பிடித்து திரையில் காட்டி இந்த யோனிக்கு சொந்தக்காரி யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று பொதுமக்களுக்கு புதிர் போட்டி அறிவித்தாய். ஒரு நாள் கெடுவும் கொடுத்தாய். இதை விட ஒரு வக்கிரத்தை என் மேல் யார் அரங்கேற்ற முடியும்.

ஒரு வேளை நீ என்னிடம் அன்று பேரம் பேசியிருந்தால் என் மானத்தை காப்பாற்ற உன் காலில் விழுந்து கதறியிருப்பேன், என் கடைசி ஆடை வரை உனக்கு விற்றிருப்பேன். அல்லது நீ வரிசையாக ஆண்களை அனுப்பு நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று ஒரு நாள் முழுக்க படுத்தே கிடந்திருப்பேன். அய்யோ...என்னை கிழித்து எறிந்துவிட்டாயே?

என்னை முழுவதும் நிர்வாணமாக்கி என் முகத்தை மட்டும் கருப்பு துணியால் மூடி தெருத்தெருவாக இழுத்துக்கொண்டு போனாய். குழந்தைகளும் பெரியவர்களும் குடும்பஸ்தர்களும் என் திருக்கோலம் காண அம்மணமாய் அழைத்துக்கொண்டு போனாய். அந்த ஊர்வலத்தில் என் தாயும் நின்றிருந்தாள் என்று உனக்கு தெரியுமா? பிறகு ஒரு குன்றின் மேல் என்னை நிறுத்தி இந்த பரிதாபத்துக்குரிய நடிகை யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று புதிர் போட்டாய்.
என்ன அழகாக புதிர் போட்டாய். R என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட நடிகை.

பெரும் மதிப்புக்குரிய பத்திரிகையாளனே....சாமியாரின் சல்லாப வீடியோ ஒன்று உன் அலுவலகத்திற்கு வருகிறது. அதை நீ ஓடவிடுகிறாய். சுற்றி ஐம்பது பேர் அமர்ந்து அதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது உன் வீட்டில் உள்ள ஒரு பெண்ணோடு சாமியார் படுத்திருப்பதாக காட்சி வருகிறதென்று வைத்துக்கொள்வோம் உடனே எழுந்து “அய்யா அந்த பெண் எங்கள் வீட்டு மங்கை , வசமாக மாட்டிக்கொண்டாள், அவள் பெயர் dash என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும்” என்று எல்லோருக்கும் அறிவிப்பாயா?. அந்த வீடியோவுக்கு பின்னணி இசை சேர்த்து நேர்த்தியாக ஒளிபரப்பி உன் வீட்டாரோடு அமர்ந்து “அம்மா இந்த எப்பிசோடுக்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுதினேன்” என்று பெருமை பொங்க பீற்றிக்கொள்வாயா? நான் கண்ணீரோடு கேட்கிறேன்

ஒரு வேளை உன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடரில் நடிக்கும் பிரதான நடிகையின் ஆபாச வீடியோ உனக்கு கிடைத்திருந்தால் அந்த தொடர் முடிவதற்கு முன் அந்த நடிகையின் ஆபாசத்தை நீ பகிரங்கமாக பின்னணி இசையோடு வெளியிடுவாயா? உன் தொடரில் அவள் ஒரு சீதையாக சித்தரிக்கப்பட்டிருப்பாள். என் துர்ரதிர்ஷ்டம் உன் தொலைக்காட்சியில் வரும் ஏதேனும் ஒரு தொடரில் எனக்கு சீதை வேடம் கிடைக்காமல் போய்விட்டது.
அப்படியிருக்குமானால் என் மானம் தொடர் முடியும் வரையாவது காப்பாற்றப்பட்டிருக்கும்.

“எவளோ ஒருத்தியின் உடல் தானே...எவளோ ஒருத்தியின் மானம்...கப்பல் ஏறினால் என்ன? அவள் மட்டும் என்ன யோக்கியமா? நடிகை தானே...பலர் பார்க்க தன்னை பலகாரம் ஆக்கியவள் தானே என்று எளிதாய உன் செயலை ஞாயப்படுத்தி விட்டாய். போகட்டும்....” என் கண்ணீர் உன்னை தொடரும்.
அது நிச்சயம் உன்னை பழி வாங்கும்.

நீ என்றாவது நினைத்து பார்த்ததுண்டா? உன் வாலிபம் என் போன்ற நடிகைகளின் சதையால் ஆன சவக்குழி என்பதை . முகப்பரு முளைத்த வயதுகளில் பத்திரிகைகளின் நடு பக்கத்தில் நடு மார்பு தெரிய நான் நின்றிருந்தேனே அதை நடு இராத்திரியில் குளியலறையில் பார்த்து குதூகலமடைந்தாயே….. துரோகி என் உடல் அச்சிடப்பட்ட காகிதத்தை தின்ற கழுதை நீ. உனக்கு பொதி சுமப்பவளின் வலி எங்கு தெரியப்போகிறது.
வேண்டாம் இனி நான் அழ ஒன்றுமில்லை.

என் கண்களுக்கு பழி தீர்க்கும் பசி வந்துவிட்டது. என் உடல் நடுங்குகிறது. எப்போதுமில்லாமல் இப்போது என் நிர்வாணம் என்னை பயமுறுத்துகிறது. எப்போதும் என்னை கேமரா கண்கள் துரத்துகிறது. உறக்கத்தின் நடுவே படபடப்போடு விழித்து என் உள்ளாடைகளை உதறுகிறேன். கேமராக்களை என் யோனியில் கூட பொருத்தியிருக்கலாம்.

இப்போது சாமியாருக்கும் எனக்கும் என்ன உறவு என்று சர்ச்சை கிளம்பலாம். சாமியாருக்கு நான் பக்தை. சாமியாருக்கு நான் சேவகி. சாமியாருக்கு நான் காதலி. சாமியாருக்கு நான் வேசி. சாமியாருக்கு நான் அடிமை. எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள். ஆனால் உன் மனைவியோடு நீ புணர்கிற இரவுகளில் எல்லாம், அவள் உன்னை தான் காதலோடு, தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்ற உன் ஆதாரமில்லாத நம்பிக்கையில் தான், அவளுடைய கற்பும் உன்னுடைய ஆண்மை ததும்பும் ஆவணவும் காப்பாற்றப்படுகிறது என்று எப்போது நீ உணரப்போகிறாய்.

சாமியார் ஊருக்கு உபதேசம் செய்தார். அதை எல்லோரும் நம்பினார்கள். அது பொய். சாமியார் போலி என்பதை ஊருக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவருடைய படுக்கை அறை எத்துனை கேவலமானது என்பதை ஊருக்கு உணர்த்தும் பொருட்டு இந்த நாடகத்தை நீ அரங்கேற்றுகிறாய். அதில் என்னையும் நிர்வாணமாக்கிவிட்டாய். போகட்டும். என் பொருட்டு சாமியாரை கடவுளாக வழிபடும் மக்கள் திருந்தினால் அதற்கு என் யோனி பயன்பட்டிருக்கிறது என்பதால் நான் பெருமை தான் படுகிறேன்.

அதே நேரம் உன் வீட்டில் துர்நாற்றம் வீசுகிறது. என்னவென்று ஆராய்கிறாய். வீட்டில் ஒரு மூலையில் கழிவு நீர் கசிகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அடடா என் வீட்டில் எப்படி கழிவு நீர்? இது எங்கிருந்து வருகிறது என்று தேட தொடங்குகிறாய். பிறகு ஒரு நாள் அது என்னுடைய வீட்டிலிருந்து தான் வருகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்ட தீர்மானிக்கிறாய். அதற்காக நான் என் வீட்டு கழிவறையில் சிறுநீர் கழிப்பதை ரகசியமாய் படம்பிடித்து ஊருக்கு காட்டி என் வீட்டில் ஒழுகும் கழிவு நீர் இது வழியாகத்தான் வருகிறது என்று நான் சிறுநீர் கழிக்கும் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து நிரூபிக்கிறாய். சாமியாரை காட்டிக்கொடுக்க என்னை ஒரு கருவியாய் பயன்படுத்தினாய் இந்த கருவிக்கும் சதை உயிர் மயிர் மானம் சமுதாயம் வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதென்பதை நீ ஏன் மறந்து போனாய்.
நடிகைக்கு எதற்கு மானம். அதுவும் ஒரு சாமியாரோடு படுக்கையில் புரளும் நடிகைக்கு எதற்கு மானம் என்று நீ முடிவெடுத்துவிட்டாயா?
நான் நடிகையாய் இருப்பது முழுக்க முழுக்க என் குற்றம். ஆனால் நீ நடித்துக்கொண்டிருக்கிறாய் என்பதை எப்போது உணரப்போகிறாய்.

நீ குறித்துக்கொள். நிச்சயம் நீ பழி தீர்க்கப்படுவாய். என் பொருட்டு ஏதாவது ஒரு பெண் உன்னை பழி வாங்குவாள். அந்த இரண்டு இரவுகளையும் என் மனதிலிருந்து அழிக்க முடியாது. ஆனால் ஒன்றை புரிந்துகொள் இனி மேல் நடிகைகளாகிய எங்களின் வளங்களை இரசிக்கும், தனங்களை ரசிக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் ரசிகனாக பார்க்க மாட்டோம். எங்கள் செருப்புக்கு இணையாகவே மதிப்போம்.

நன்றி,
ரஞ்சிதா.

மேலுள்ள கடித்தத்தை நாங்கள் எங்கே இருந்து எடுத்தோம் என்பதை அறிய விரும்பினால், இங்கே அழுத்துங்கள்.

Saturday, 6 March 2010

ரஞ்சிதா நடிகர் சங்கத்தில் சேரவேயில்லை : சரத்குமார்

நடிகை ரஞ்சிதாவிற்கும் நித்தியானந்தாவிற்கும் இடையில் இருந்த தொடர்புகளை Sun News தொலைக்காட்சியும், தினகரன் பத்திரிகையும் அம்பலப்படுத்தியதும், அதன்பின்னர் இருவரும் மாயமாகிவிட்டதும் யாவரும் அறிந்த விடயம். இருவரும் எங்கே இருக்கிறார்கள் என தெரியாததால் ஒவ்வொருவரும் தத்தமது அறிவிற்கு எட்டியதுபோல் ஊகங்களைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை ரஞ்சிதாவை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவீர்களா என சரத்குமாரிடம் கேட்கப்பட்டதற்கு, "அவர், நடிகர் சங்கத்தில் சேரவேயில்லை. அப்படியிருக்கும் போது நாங்கள் எப்படி அவரை நீக்குவது?" என பதிலளித்திருக்கிறார்.

Thursday, 4 March 2010

ரஞ்சிதாவின் சூடான படங்கள்.

ரஞ்சிதாவின் சூடான படங்கள்.

நிதியானந்தவின் காமலீலை : நீளும் நடிகைகளின் பட்டியல்.

"காதவைத்திற காற்று வரட்டும்" புகழ், நித்தியானந்தாவின் காமலீலை தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. வீடியோவில் தெரியும் பெண், நடிகை ரஞ்சிதா என, தினகரன் நாளேடு உறுதிப்படுத்தியது. ரஞ்சிதாவுடன் நின்றுவிடாமல் இந்த சர்ச்சை, பல நடிகைகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டுகிறது. நித்தியானந்தாவின் லீலைகளில் தொடர்புபட்ட நடிகைகளின் பெயர் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இது தொடர்பாக, தினகரனில் முன்னர் வெளியாகிய செய்திகளை எமது வாசகர்களுக்காக இங்கே தந்திருந்தோம். அந்த வரிசையில், தினகரனில் வெளியான புதிய செய்தியும் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.


நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகள் : நெருங்கிய நடிகைகள் பட்டியல் நீள்கிறது!

Wednesday, 3 March 2010

நித்யானந்தா தலைமறைவு!

நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலையில் இருந்தவேளை வீடியோ படம் பிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாமி (?) நித்தியானந்தா தலைமரைவாகீவிட்டார். அவரது ஆச்சிரமங்கள் பல பக்த கேடிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகளையும் படங்களையும் வீடியோ காட்சிகளையும் எமது வாசகர்களுக்காக இங்கே தந்திருந்தோம். இதன் தொடர்ச்சியாக, தினகரனில் வெளிவந்த புதிய செய்தியையும் உங்களுக்காக இங்கே தருகிறோம்.

தினகரனில் வெளியாகியுள்ள செய்தி:


நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலைகள் : நித்யானந்தா தலைமறைவு!

சென்னை: பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் நித்யானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் நடத்தி வருபவர் பரமஹம்ச நித்யானந்தா (31). தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை உள்பட பல நகரங்களிலும் இவரது ஆசிரமங்கள் உள்ளன. உலகின் பல நகரங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இந்நிலையில், பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படுக்கை அறை வீடியோ காட்சிகள் நேற்று வெளியாயின. இது பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர். ஆசிரமத்துக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பதற்றம் அதிகரித்ததால், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 45 ஊழியர்கள் நேற்று நள்ளிரவு நித்யானந்தாவின் பேனர்கள், போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினர். ஆசிரமத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரான தி.மலையில் ஆசிரமம் அமைக்க நித்யானந்தா ஆசைப்பட்டார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர் தங்க சொகுசு அறையுடன் கட்டிடம் கட்டப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும்போது அங்குதான் தங்குவார். கடந்த ஜனவரி 8&ம் தேதி பிறந்தநாள் விழாவை இங்கு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில், ‘‘ஆடம்பர வாழ்க்கை வாழும் நித்யானந்தர் கிரிவலப்பாதையில் ஆசிரமம் கட்டக் கூடாது என்று ஏற்கனவே கூறினோம். அவரது சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். தி.மலைக்குள் அவரை இனி விடமாட்டோம்’’ என்றார். புதுச்சேரி வில்லியனூர் ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்தை பொதுமக்கள் சூறையாடினர். ஜன்னல்கள், விளக்குகள், மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாமியார் பேனரை தீவைத்து கொளுத்தி செருப்பால் அடித்தனர். பதற்றம் அதிகரித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இந்து முன்னணி அமைப்பினர் மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நித்யானந்தாவை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.
கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மோகினிபாலம் பகுதியில் ஆசிரமத்தின் பெயர்பலகையை பொதுமக்கள் தார்பூசி அழித்தனர். நெல்லை டவுனில் உள்ள நித்யானந்தர் தியான மையத்தில் நித்யானந்தா படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், போஸ்டர்களை நிர்வாகிகளே கிழித்து எறிந்தனர். இந்த மையத்தில் சில மாதம் முன்பு அவர் ஆன்மீக உரையாற்றியுள்ளார். சீர்காழி சட்டநாதபுரம் மனோன்மணியம் நகரில் நித்யானந்த பீடத்தை அவர் சமீபத்தில் திறந்துவைத்தார். இங்கு தினமும் பஜனை, தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. டிவியில் ஆபாச காட்சிகளை பார்த்த மக்கள் ஆவேசமடைந்து நித்யானந்தா படங்கள், பேனர்களை நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர்.


தினகரனில் வெளியாகியுள்ள வீடியோவை பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள்


Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog