Showing posts with label Vadivel. Show all posts
Showing posts with label Vadivel. Show all posts

Friday, 5 March 2010

சமாதானமா போக நான் புறா இல்லடா.... சுறா !

"சமாதானமா போக நான் புறா இல்லடா...சுறா !", இதுதான் விஜயின் புதிய பஞ்ச் டயலாக். விஜயும் பஞ்ச் டயலாக் உம் இணை பிரியாத நண்பர்கள் போல. பஞ்ச் டயலாக் இல்லாத விஜயின் படமே இல்லை என கூறலாம். S.P.ராஜ்குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் விஜயின் 50 வது படமான 'சுறா'வில் மேற்கூறப்பட்ட பஞ்ச் டயலாக் இடம்பெறுவதாகவும், வேறு சில பஞ்ச் டயலாக்குகளும்  சுறாவில் இருக்குமெனவும் ஒரு கதை அடிபடுகிறது.

சுறா படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் அதேவேளை விஜயை காதலிக்கும் கல்லூரி மாணவியாக தமன்னா நடிக்கிறார். காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சங்கிலி முருகன் இந்தப்படத்தை தயாரிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்தப்படத்தை வெளியிடுகிறது.

Monday, 1 March 2010

வருமானவரித்துறையினரிடம் கெஞ்சிய வடிவேலு....

வருமானவரிதுறையினர் வடிவேலுவின் வீட்டில் சோதனை போட்டது பழைய விடையம். யாவரும் அறிந்தது. ஆனால், வருமானவரித்துறையினர் என்னென்னவெல்லாம் கைப்பற்றினார்கள் என்பது இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. அதிலும் பார்க்க பெரிய ரகசியம் இப்போது வெளிவந்துள்ளது. வடிவேலு அப்படி என்னத்தைதான் கெஞ்சினார்?

இதுதான் அது. வருமானவரித்துறையினர் வடிவேலுவின் வீட்டிற்கு சென்றபோது, சில சிறுவர்கள் வடிவேலுவை தாத்தா என்று கூப்பிட்டார்களாம். விசாரணைக்கு சென்றவர்கள் மலைத்துபோய்விட்டார்களாம். 25 வயது இளைஞனாக தன்னை காட்டிக்கொள்ளும் வடிவேலு உண்மையில் 50 வயதைக்கடந்துவிட்டவர். தாத்தா என்று கூப்பிட்ட சிறுவர்கள் அவரது பேரப்பிள்ளைகளாம்.         .

விசாரணை முடிந்து புறப்பட்டவர்களிடம், குடும்ப ரகசியங்களை வெளியில்  சொல்லவேண்டாமென்று வடிவேலு கேஞ்சிக்கேட்டுக்கொண்டாராம். இப்போதுதான் இந்தச் செய்தி கசிய ஆரம்பித்திருக்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog