Sunday 28 February 2010

மீண்டும் காதலில் சிம்பு.......?

சிலகாலமாக நயன்தாராவை காதலித்து பிரிந்து தன்பாட்டில் சென்றவர் சிம்பு. இது யாவரும் அறிந்த பழைய விடயம். ஆனால் நயன்தாரா இப்போது பிரபு தேவாவை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்படுகின்றது.


சரி, சிம்புவின் விடயத்துக்கு வருவோம்... சிம்பு திரிஷாவை காதலிப்பதாக புதிதாக தகவல் பரவ ஆரம்பித்துள்ளது. இருவரும், புதிதாக திரைக்குவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நெருக்கமாக நடித்திருந்தனர். அதிலும் முத்தக்காட்சிகளில் நெருக்கத்தை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.... ஆனால் இந்தக் கிசு கிசுவை மறுத்த சிம்பு, தான் எவரையும் காதலிக்கவில்லை என்றும் தான் தனது வேலையைத்தான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.


மேலும், தனக்கு ஒரு சாதாரணமான பெண் போதும் என்றும் சிறப்பான பெண் தேவையில்லை என்றும் சிம்பு கூறினார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் எனது பாத்திரத்தை மிகவும் நேசித்தேன். எனது அடுத்த படம் இன்னும் முடிவாகவில்லை. K.V.ஆனந்தின் படத்தில் நடிப்பதற்கு எண்ணியிருந்தேன். 


ஆனால் படம் தொடங்குவதற்கு முன்னரே எனது சிகையலங்காரத்தை மாற்றுமாறும் அவர் சொல்லுவதுபோல் செய்யுமாறும் கூறுகிறார். இவ்வாறான நிபந்தனைகளை ஏற்க மறுத்து அவரது படத்திலிருந்து விலகிவிட்டேன் எனவும் சிம்பு கூறினார்.  

1 comments:

Anonymous said...

"Romantic King" Simbu......

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog