Saturday 27 February 2010

மலையாள படத்தில் சோனியா அகர்வால்

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வால் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அவற்றுள் 7G ரெயின்போ காலனி மற்றும் திருட்டுபயலே முக்கியமான படங்கள். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்தபின்னர் அவர் நடிப்பதை நிறுத்தியிருந்தார்.

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் செல்வராகவன் நடிகை அண்ட்ரியா உடன் நெருங்கி பழகுவதாக வந்த செய்தியுடன் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் உருவாக்கி அது விவாகரத்து வழக்கிற்காக நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு சென்றது. பின்னர் இருவரையும் பிரிந்து வாழும் நிலைமையையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சோனியா அகர்வால் புதிய படங்களில் வாய்ப்பு தேடினார். கவர்ச்சி உடையில் பொது நிகழ்ச்சிகளுக்கு வந்த அவர் தனது புகைப்படங்களையும் அல்பம்களையும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பினார்.

இப்போது மலையாளப் படம் ஒன்றில் நடிக்க தெரிவாகியிருக்கிறார். அந்தப்படத்தில் ஹீரோவாக சுரேஷ் கோபி நடிக்கவிருக்கும் அதேவேளை அந்தப்படத்தை T.S.சுரேஷ் பாபு இயக்குகிறார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Search This Blog