விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் நேற்று திரைக்கு வந்ததுடன், திரிஷாவின் பாரம் குறைந்துவிட்டது. இருந்தாலும், அடுத்த வேலைக்கு தான் அவசரப்படவில்லை என்றும் கையொப்பம் இட முன்னர் தான் கதையை தெரிவு செய்ய வேண்டும் என்றும் சொல்ல்கிறார்.
"இப்போது எனது திரைப் பயணம் முக்கிய கட்டத்திலிருப்பதால், கவனமாக இருக்க நினைக்கிறேன். நல்ல திரைக்கதையை தெரிவு செய்து ஒரே நேரத்தில் சில படங்களில் மாத்திரமே கவனம் செலுத்த ஆசைப்படுகிறேன். எண்ணிக்கை விளையாட்டில் பிரயோசனம் இல்லை." என திரிஷா கூறினார்.
முயற்சியும் திறமையும் கொண்ட ஒவ்வொரு நடிகருக்கும் சினிமா துறையில் இடமிருக்கிறது என்று கூறிய திரிஷா, விண்ணைத்தாண்டி வருவாயா படம் பற்றி கூறியதாவது, "எதிர்பார்ப்புகள் என்னை பதட்டமடைய செய்தன. எப்படி என்றாலும் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு என்னை மகிழ்சியடைய செய்கின்றன. ஏனென்றால் திரைக்கதை ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டது. எனக்கு மிகவும் பிடித்த பாத்திரங்களில் அதுவும் ஒன்று."
Saturday 27 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment